Kshatriyas - The Ruler
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kshatriyas - The Ruler, Community Center, Chennai.
25/05/2026
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி
நிறுவனர் தலைவர் சி.என். இராமமூர்த்தி அவர்கள் வெளியிடும் அறிக்கை
“தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு – மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!”
தமிழகத்தில் கடந்த சில நாட்களால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் அறிவிப்பில்லா மின்வெட்டு, குறைந்த மின் அழுத்தம், அடிக்கடி ஏற்படும் மின்தடை போன்ற பிரச்சனைகள் பொதுமக்கள், சிறு தொழில்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தொழிற்துறையினரை கடுமையாக பாதித்து வருகின்றன. குறிப்பாக கடும் கோடை வெப்பநிலை நிலவும் இந்நேரத்தில் மின்வெட்டு மக்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சிரமத்தையும் மனஅழுத்தத்தையும் உருவாக்கியுள்ளது.
தமிழகத்தின் மின்தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய உச்சபட்ச மின் தேவை 21,000 மெகாவாட் அளவை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 16,000 முதல் 17,000 மெகாவாட் அளவில் இருந்த மின் பயன்பாடு தற்போது வேகமாக உயர்ந்துள்ளது. இதற்கு தொழிற்துறை விரிவாக்கம், வீட்டு உபயோக மின் சாதனங்களின் அதிகரிப்பு, கடும் வெப்பநிலை மற்றும் நகரமயமாதல் முக்கிய காரணங்களாக உள்ளன.
மின் உற்பத்தி மற்றும் விநியோக கட்டமைப்புகள் மக்கள் தேவைக்கு ஏற்ப முழுமையாக மேம்படுத்தப்படாததால் பல இடங்களில் டிரான்ஸ்ஃபார்மர் பழுது, மின் கம்பி கோளாறு, துணை மின் நிலைய சுமை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் பல மணி நேர மின்வெட்டு நடைபெறுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.
தற்போதைய சூழலில் மருத்துவமனைகள், குடிநீர் விநியோகம், சிறு தொழிற்சாலைகள், விவசாய மோட்டார்கள் மற்றும் மாணவர்களின் கல்வி செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. மேலும் சிறு, குறு தொழில்கள் உற்பத்தி இழப்பையும் பொருளாதார நெருக்கடியையும் சந்தித்து வருகின்றன. இது மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பின்வருமாறு:
தமிழகம் முழுவதும் நடைபெறும் அறிவிப்பில்லா மின்வெட்டுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
மின்விநியோக கட்டமைப்புகளை அவசர அடிப்படையில் புதுப்பித்து, பழைய மின் கம்பிகள் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்களை மாற்ற வேண்டும்.
கோடை கால மின் தேவையை முன்னறிவித்து தனி அவசர மின் மேலாண்மை திட்டம் உருவாக்க வேண்டும்.
சோலார், காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.
கிராமப்புறங்கள் மற்றும் தொழிற்பகுதிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க தனி கண்காணிப்பு மையங்களை அமைக்க வேண்டும்.
மின்தடை தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் ஒற்றை தகவல் மையம் உருவாக்கப்பட வேண்டும்.
மின்வாரியத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
தமிழகம் தொழில், கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ள மாநிலமாக இருப்பதால், மின்விநியோகத்தில் நிலைத்தன்மை மிக அவசியமான ஒன்றாகும். மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி தமிழக அரசு நீண்டகால திட்டமிடலுடன் மின் உற்பத்தி மற்றும் விநியோக துறையில் உடனடி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி வலியுறுத்துகிறது.
சி.என். இராமமூர்த்தி
நிறுவனர் தலைவர்
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி.
14/05/2026
தென்னாட்டு ஜான்சிராணி என அன்போடு காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர்தான் கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்கள்.
அவருடைய முதன்மையான போராட்டம் மதுக்கடை ஒழிப்பு. எங்கெல்லாம் மதுக்கடை இருந்ததோ அங்கே நேராக சென்று அடித்து நொறுக்கி மதுக்கடைகளை விரட்டியடித்தவர் தான் கடலூர் அஞ்சலை அம்மா அவர்களாவார்.
அப்படிப்பட்ட வீரத்தாயை கொள்கை தலைவராக வைத்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் பள்ளி கல்லூரி அருகே இருந்த 717 மதுக்கடைகளை மூடி உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது.
கொள்கை தலைவர்களை பெயரளவில் வைக்காமல் செயல்பாட்டிலும் செய்துகாட்டுவது வரவேற்கத்தக்கது.
.
10/05/2026
எத்தனையோ இடையூறுகளுக்கு இடையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களின் தீர்ப்புபடி நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என்று பெருந்தன்மையாக தோழமைக்கட்சிகளுக்கு எந்த கட்டுபாடும் விதிக்காமல் சமூகநீதியை கடைபிடித்த மாண்புமிகு முன்னாள் முதலலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் திமுகவை ஒதுக்கவில்லை என்பதற்கு 1.53 கோடி வாக்காளர்களின் ஆதரவே சாட்சி.
திமுக எதிர்க்கட்சியாக செயல்படுவதில் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி மற்றும் வன்னியர் கூட்டமைப்பு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும்.
புதியதாக தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள தமிழக வெற்றிக்கழகம் அனைத்து சமுதாயத்திற்கும் அமைச்சர் பதவியில் உரிய பிரதிநிதித்துவத்தை கொடுக்க வேண்டும்.
வன்னிய சமுதாயத்தின் பல திட்டங்களான 10.5% உள்ஒதுக்கீடு, வன்னியர்பொதுச்சொத்து வாரியம், வன்னியர் நலவாரியம், NLC பிரச்சினைகளின் தீர்வு, போதைப்பொருள் ஒழிப்பு, அஞ்சலை அம்மாள் பெண்கள் பாதுகாப்பு திட்டம், இலவச கல்வி திட்டம், ஆராய்ச்சித்துறை மேம்பாடு, வருவாய் பெருக்குதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்ற அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற,
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி மற்றும் வன்னியர் கூட்டமைப்பு ஐயா சி.என். இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் போராடி மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும்.
கடந்த 50 ஆண்டுகாலம் எந்த அரசியல் பதவியும் இல்லாமல் சட்டப்படி போராடி பல திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்த வைத்தவர் ஐயா சி.என். இராமமூர்த்தி ஆவார். அவருடைய மக்களுக்கான போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
TVK Vijay #அறிவாயுதம்_ஏந்துவோம்
01/05/2026
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
உழைப்பே உயர்வு… தொழிலாளியே உலகின் முதுகெலும்பு!
உலக தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு, தங்கள் உழைப்பால் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக விளங்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், மரியாதைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலையில் சூரியன் உதிக்கும் முன்பே பணிக்காக எழும் தொழிலாளியின் வியர்வைதான் இந்த நாட்டின் செழிப்பை உருவாக்குகிறது.
கட்டிடத் தொழிலாளி முதல் விவசாயி வரை…
தொழிற்சாலை ஊழியர் முதல் போக்குவரத்து தொழிலாளர் வரை…
தினக்கூலி தொழிலாளி முதல் தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளர் வரை…
ஒவ்வொருவரின் உழைப்பும் இந்த சமூகத்தின் உயிர் நாடியாக திகழ்கிறது.
ஆனால் இன்று கூட பல தொழிலாளர்கள் குறைந்த ஊதியம், நிரந்தரமற்ற வேலை, சமூக பாதுகாப்பின்மை, பணிச்சுமை, உரிமை மறுப்பு போன்ற பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
உழைப்புக்கு உரிய மதிப்பும், வாழ்விற்கு தேவையான நலன்களும் கிடைக்க வேண்டும்.
அதுவே உண்மையான சமூக நீதி.
“உழைக்கும் மனிதன் உயர வேண்டும்” என்ற இலக்கை முன்வைத்து, தொழிலாளர்களின் உரிமைக்காகவும், சமூக சமத்துவத்திற்காகவும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து போராடும் என்பதை இந்த மே தின நாளில் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழிலாளியின் வியர்வைக்கு மதிப்பு கிடைக்கும் நாள் தான் உண்மையான முன்னேற்ற நாள்!
உழைப்பவர்களின் குரல் தான் இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி!
உலக தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!
அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் நலமும், முன்னேற்றமும், உரிமையும் நிலைக்க இறைவனை வேண்டுகிறேன்.
— சி. என். இராமமூர்த்தி
நிறுவனத் தலைவர்
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Chennai
600003