KEYAAR TRUST
No Child Hungry - Save Children from Malnutrition. Every Child in School - Educate a Girl, build our Nation. Keyaar Trust is Non Profit Organization.
11/05/2026
வெறும் ஜோவின் கதை
“வேலையை விட்டு போகவேண்டும் என்பதற்காக ரிட்டயர் ஆகவேண்டாம். புதிய கெரியர் ஒன்றை தேடுவதற்காக ரிட்டயர் ஆகுங்கள்” — என்று ஒரு ஃபயர் வீடியோவில் ஒரு நடுத்தர வயது மனிதர் பேசினார். அவரின் முகத்தில் அமைதி இருந்தது. அந்த அமைதிக்கு பின் எத்தனை இரவுகளின் துயரமோ, யாருக்கும் தெரியாது.
அவரின் பெயர் ஜோ. ஒரு பெரிய கம்பனியின் சீ.ஓ.ஓ. ஒருகாலத்தில்.
“என் சொல் முடிவு. என் கையொப்பம் தீர்ப்பு,” — என்று பெருமையாகச் சொல்லக்கூடிய நிலை. அவருக்கு கீழே டீம்கள். மேலே டைரக்டர்கள். நடுவில் அவர்தான் தாங்கும் தூண்.
ஆனால் அந்த தூண் மெதுவாக உடைந்துகொண்டிருந்தது.
தூக்கம் இல்லாத இரவுகள். மின்னஞ்சல்கள், அழைப்புகள், டெட்லைன்கள்.
“நான் முக்கியமானவன்” என்ற உணர்வு, அவர் மனச்சுமையை மூட்டிக் கொண்டே போனது.
அதிர்ஷ்டவசமாக, அவருக்கு மோசமான பழக்கங்கள் எதுவும் இல்லை.
ஆனால், குழந்தைகள் இல்லாத தனிமை மட்டும் நிழலாக ஒட்டியிருந்தது.
“போதும்,” என்றார் ஒருநாள்.
அன்றைய தினம் அவர் ரிட்டயர் ஆனார்.
அடுத்த நாள் காலை, கம்பனியில்லா வாழ்க்கை தொடங்கியது.
மின்னஞ்சல் இல்லை. அழைப்புகள் இல்லை. கூட்டங்கள் இல்லை.
ஆனால் — பேச யாருமில்லை.
முக்கியத்துவம் என்று நினைத்தது ஒரு மாயை என புரிந்தது.
“நான் இருந்தால் கம்பனி ஆடும் என்று நினைத்தேன். ஆனால் கம்பனி இன்னும் சுற்றிக்கொண்டிருக்கிறது.
என்னை நினைவில் கூட வைத்திருக்கவில்லை.”
அது தான் அவரின் விழிப்பு.
அவர் கூறினார் — “பணியிடத்தில் எனக்கிருந்தது போலி முக்கியத்துவம்; போலி மரியாதை.”
அந்த உண்மை குத்தியது.
ஆனால் குத்திய அந்த வலியிலிருந்தே ஒரு புதிய ஜோ பிறந்தான்.
ஜோ மெதுவாக உள்ளூர் பள்ளிகளில், கல்லூரிகளில், கெஸ்ட் லெக்சராகப் பேச ஆரம்பித்தார்.
ஹைஸ்கூல் மாணவர்களுக்கு கெரியர் தேர்வுகளை பற்றி கூறினார்.
முதல் சில நிமிடங்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டார்கள்.
ஆனால் அவர் “நான் சீ.ஓ.ஓ. இருந்தபோது...” என்று தொடங்கும் போதே கவனத்தை இழந்தார்.
அவர் புரிந்துகொண்டார் —
“அவர்களுக்கு என் பழைய பெருமைகள் தேவையில்லை.
அவர்களுக்கு என்னால் இப்போது கிடைக்கும் உதவிதான் முக்கியம்.”
அந்த உண்மை அவரை மாற்றியது.
இப்போது ஜோ, பல கல்லூரிகளிலும் மாணவர் கிளப்புகளிலும் பேச அழைக்கப்படுகிறார்.
அவரை காணும் இளம் தலைமுறை மகிழ்ச்சியடைகிறது.
அவர் ஒரு புகழ்பெற்ற நிர்வாகி அல்ல — ஒரு வழிகாட்டி.
“நான் யார் என்று இப்போது தெரிகிறது,” — என்கிறார் அவர்.
“நான் வெறும் ஜோ தான். சீ.ஓ.ஓ. ஜோ அல்ல.”
அவர் சேர்த்தார் —
“உங்களுக்கு பேரக்குழந்தைகள் இருந்தாலும் இதேதான் உண்மை.
அவர்கள் உங்களை ‘தாத்தா’ என மட்டுமே அறிவார்கள்.
உங்கள் பழைய கதைகளைச் சொல்லத் தொடங்கினால் ஓடிவிடுவார்கள்.
ஆனால் அவர்களுக்கு உதவும் ஏதாவது செய்தால், மகிழ்ச்சி அடைவார்கள்.”
அதற்காகவே அவர் தனது யூடியூப் சேனலின் பெயரை மாற்றினார் —
“வெறும் ஜோ.”
அவர் சொல்லுகிறார் —
“சீ.ஓ.ஓ. ஜோவாக இருந்ததைவிட, வெறும் ஜோவாக இருப்பது தான் மனநிறைவு தருகிறது.”
அந்த வீடியோவின் முடிவில் அவர் ஒரு வரி மட்டும் சொன்னார் —
“சில சமயம், நம் பெயருக்கு முன் இருந்த எல்லாவற்றையும் அகற்றினால்தான், நம்மை நாமே காண முடிகிறது.”
வெறும் ஜோவின் கதை —
ஒரு முடிவின் பின்னால் தொடங்கிய புதிய ஆரம்பம்.
#பகிர்வு பதிவு: நியாண்டர் செல்வன்
09/05/2026
உண்மையாகச் சொன்னால் கண்களில் நீர் வரவைக்கும் ஒரு காட்சி இது!
Mexico நாட்டைச் சேர்ந்த யுக்காரி என்ற இந்த சிறுமி, தனது 15வது பிறந்தநாளில் 🎂🎉🎊 செய்த விஷயம் பலரையும் நெகிழச்செய்துள்ளது. பொதுவாக இப்படிப்பட்ட சிறப்பு நாட்களில் ஆடம்பர கொண்டாட்டங்களும், கலர்ஃபுல் போட்டோஷூட்டுகளும் தான் அதிகமாக பார்க்கப்படும். ஆனால் யுக்காரி தனது போட்டோஷூட்டிற்காக தேர்வு செய்தது, தனது அப்பா கடந்த 23 ஆண்டுகளாக வேலை செய்து வரும் அந்த குப்பை சேகரிக்கும் லாரியைத்தான்! ✨
தன்னை வளர்க்கவும், படிக்க வைக்கவும் தனது அப்பா இத்தனை ஆண்டுகள் சிந்திய வியர்வையை, உலகத்தின் முன் பெருமையுடன் காட்டினார் அந்த மகள்.
“எந்த வேலைவும் சிறியது இல்லை… உழைத்து குடும்பத்தை நடத்தும் பெற்றோரைக் கௌரவிப்பதே மிகப்பெரிய பெருமை” என்பதைக் இந்தச் சிறுமி அழகாக நிரூபித்துள்ளார். ஆடம்பர கார்களைவிட தனது அப்பாவின் இந்த வண்டிதான் அவளுக்கு பெருமை என சொல்லும் போது, அதை பார்க்கும் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு நெகிழ்ச்சி ஏற்படும்.
சமூக வலைதளங்களில் தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. குழந்தைகள் பெற்றோரிடம் கொண்டிருக்கும் நன்றியும் மரியாதையும் எவ்வளவு பெரியது என்பதை நினைவூட்டும் அழகான தருணம் இது.
உலகத்திற்கே ஒரு பெரிய பாடமாக மாறியிருக்கிறார் யுக்காரி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகளே!
உன் இந்த மனசை பாராட்டாமல் இருக்க முடியாது. இப்படிப்பட்ட நல்ல செய்திகளை பார்க்கும்போதுதான் மனதிற்கு ஒரு தனி மகிழ்ச்சி கிடைக்கிறது.
Help Our Champion Athlete Run Again!
Shasmitha (15), an award-winning athlete from Coimbatore, Tamil Nadu is fighting for her life after a devastating accident. We need your help to bring her back to the field.
🏃♀️ About Shasmitha
Shasmitha is not just a student; she is a born fighter. Her achievements speak for themselves:
2025 Coimbatore District Overall Sports Champion
2024 Zonal Level Throwball Winner
Zonal Level Long Jump Player
From a humble lower-middle-class background, she has broken records and brought pride to her community. Now, she faces her toughest hurdle yet.
🏥 The Medical Crisis
Currently admitted at KMCH Coimbatore, Shasmitha is in intensive care with critical injuries:
Multiple Fractures: Broken Tibia and Fibula (Right Leg).
Head Trauma: Blood clot in the brain and minor skull fractures.
Internal Complications: Blockage in the lungs.
💰 The Financial Urgent Need
The cost of multiple surgeries and life-saving treatment is estimated at ₹15,00,000 (15 Lakhs). Her family is doing everything they can, but this amount is beyond their reach. Every passing second is critical for her recovery.
🙏 How You Can Help
No contribution is too small. Whether it is the cost of a coffee or a larger sum, your kindness will give Shasmitha a second chance to walk, run, and live her dreams.
Direct Donation Details:
UPI ID 1: akilvignesh13@okicici
(Akhill Vignesh)
UPI ID 2: ganesh2011d@okicici (Radhamani Ganesh)
Phone Number: +91 96775 86761
02/05/2026
வெயில் கொளுத்தும் ஒரு மதியம். சிவகங்கை. குக்கிராமம். தார் ரோடு கூட இல்ல. மண் ரோடு.
ஒரு கிழவி. வயசு 85. பேரு பூங்காவனம். கண்ணு தெரியாது. காதும் மந்தம். ஆனா காலைல 10 மணியானா வாசல்ல வந்து உட்கார்ந்துடுவா. கையில ஒரு மஞ்ச பை.
"போஸ்ட் வந்துச்சா"னு போற வர்றவங்க கிட்ட கேட்டுட்டே இருப்பா.
ஊரே கேலி பண்ணும். "கிழவிக்கு பைத்தியம். யாரு லெட்டர் எழுத போறா. புள்ளைங்க வெளிநாடு. 20 வருஷமா ஒரு போன் கூட இல்ல."
என் பேரு சத்யா. போஸ்ட் மேன். புதுசா வேலைக்கு சேர்ந்தவன். சைக்கிள்ல தபால் கொண்டு வருவேன்.
முதல் நாள் பூங்காவனம் பாட்டி என் கைய பிடிச்சுக்கிட்டா. "ராசா. என் மகன் ராமு. துபாய். லெட்டர் வந்துச்சா ராசா. 20 வருஷமா காத்திருக்கேன்."
நான் பைய செக் பண்ணேன். இல்ல. "பாட்டி. இன்னைக்கு இல்ல. நாளைக்கு வரும்."
பாட்டி சிரிச்சா. "நாளைக்கு வரும். நாளைக்கு வரும்." இதையே 20 வருஷமா சொல்லிட்டு இருக்காங்கனு பக்கத்து வீட்டு மாரி சொன்னான்.
அடுத்த நாளும் அதே கேள்வி. "லெட்டர் வந்துச்சா ராசா."
எனக்கு கஷ்டமா இருந்துச்சு. போஸ்ட் ஆபீஸ்ல கேட்டேன். "சார். பூங்காவனம்னு பேருக்கு லெட்டர் வருதா."
"அடேய். 20 வருஷமா அந்த அட்ரஸ்க்கு ஒரு தபாலும் வரல. புள்ள செத்துட்டான் போல. இல்லனா மறந்துட்டான்."
எனக்கு மனசு கேக்கல. பாட்டி தினமும் 10 மணிக்கு வாசல்ல. வெயில், மழைனு பார்க்காம. கண்ணு தெரியாது. ஆனா என் சைக்கிள் மணி சத்தம் கேட்டா போதும். "ராசா வந்துட்டியா. லெட்டர்."
ஒரு நாள் தைரியத்த வரவழைச்சு கேட்டேன். "பாட்டி. ஏன் இவ்வளவு நம்பிக்கை. 20 வருஷம். வரலையே."
பாட்டி பைய திறந்தா. உள்ள ஒரு பழைய லெட்டர். மஞ்சள் பார்டர். கிழிஞ்சு போயிருச்சு.
"ராசா. இது கடைசியா என் மகன் எழுதினது. 20 வருஷம் முன்னாடி. படி ராசா."
நான் படிச்சேன்.
"அம்மா.
நான் துபாய் போறேன். 3 வருஷம் கான்ட்ராக்ட். முடிச்சுட்டு வந்துடுவேன். வீடு கட்டுவேன். உன்ன ராணி மாதிரி வச்சுக்குவேன். கவலைப்படாத. மாசம் மாசம் லெட்டர் எழுதுவேன். நீ தபால்கார தம்பிகிட்ட கேளு. கண்டிப்பா வரும். சத்தியம்.
உன் ராமு."
பாட்டி என் கைய பிடிச்சா. "ராசா. என் மகன் பொய் சொல்ல மாட்டான். சத்தியம் பண்ணிருக்கான். லெட்டர் வரும். ஏதோ தபால்ல தாமதம். இல்லனா அட்ரஸ் மாறிடுச்சு. ஆனா அவன் எழுதுவான். நான் சாகுற வரைக்கும் காத்திருப்பேன்."
அன்னைக்கு ராத்திரி தூக்கம் வரல. போஸ்ட் ஆபீஸ் பழைய ரெக்கார்ட் புரட்டினேன். 20 வருஷம் முன்னாடி. ராமு. துபாய். அட்ரஸ்.
ஒரு தகவல் கிடைச்சது. ராமு. 18 வருஷம் முன்னாடி. துபாய்ல கட்டிடம் விழுந்து இறந்துட்டான். பாடில கூட வரல. கம்பெனி 2 லட்சம் கொடுத்துச்சு. பணம் வந்துச்சு. ஆனா பாட்டிக்கு விஷயம் தெரியாது. பஞ்சாயத்து தலைவர் அமுக்கிட்டாரு. பணத்தை எடுத்துட்டாரு. "கிழவிக்கு ஷாக் ஆய்டும்னு" சொல்லல.
என் ரத்தம் கொதிச்சது. அடுத்த நாள் பஞ்சாயத்து ஆபீஸ். தலைவர் காலர பிடிச்சேன். "ஏய். பணம் எங்க. உண்மைய சொல்லு."
அவர் மிரண்டுட்டாரு. "தம்பி. தப்பு தான். செலவாயிடுச்சு. கிழவி செத்துடும்னு நினைச்சேன். 20 வருஷம் உயிரோட இருக்கும்னு நினைக்கல."
நான் போலீஸ். கேஸ். பேப்பர். டிவி. ஊரே திரண்டுச்சு.
ஆனா பாட்டிகிட்ட என்ன சொல்றது. "உன் மகன் செத்துட்டான். 18 வருஷம் ஆச்சு"னு எப்படி சொல்றது. 85 வயசு கிழவி. ஷாக்ல செத்துடுவா.
யோசிச்சேன். யோசிச்சேன்.
ஒரு முடிவு. நானே லெட்டர் எழுதினேன்.
"அன்புள்ள அம்மா.
நான் ராமு. மன்னிச்சுடு அம்மா. 20 வருஷமா லெட்டர் எழுதல. துபாய்ல மாட்டிக்கிட்டேன். பாஸ்போர்ட் பிரச்சனை. ஜெயில். இப்ப தான் வெளிய வந்தேன். உடம்பு சரி இல்ல. வர முடியல. ஆனா மாசம் 10,000 ரூபா அனுப்புறேன். போஸ்ட் மேன் தம்பி கொண்டு வருவான். நீ நல்லா சாப்பிடு. மருந்து வாங்கு. நான் சீக்கிரம் வர்றேன். அழாத.
உன் ராமு."
லெட்டர மடிச்சு கவர்ல போட்டேன். ஸ்டாம்ப் ஒட்டினேன். "துபாய்" சீல். பழைய தேதி போட்டேன்.
அடுத்த நாள். பாட்டி வாசல்ல.
"பாட்டி. லெட்டர் வந்திருக்கு."
பாட்டி துள்ளி குதிச்சா. 85 வயசுல. "எங்க ராசா. எங்க. என் ராமு."
நான் படிச்சேன். வார்த்தைக்கு வார்த்தை.
பாட்டி அழுதா. சிரிச்சா. கூத்தாடினா. "என் ராசா உயிரோட இருக்கான். என் ராசா என்ன மறக்கல. சத்தியம் காப்பாத்திட்டான்."
ஊரே கூடிடுச்சு. எல்லாரும் அழுதாங்க. உண்மை தெரிஞ்சும் சொல்லல.
மாசம் மாசம் நான் சம்பளத்துல 10,000 எடுத்து பாட்டிகிட்ட கொடுப்பேன். "பாட்டி. ராமு அனுப்பினான்."
பாட்டி அந்த காச தொட மாட்டா. "இது என் ராசா வேர்வை. சாமி படம் முன்னாடி வை. அவன் வரும் போது கொடுப்பேன்."
3 வருஷம். தினமும் லெட்டர். நானே எழுதுவேன். "அம்மா. இந்த மாசம் உடம்பு சரி இல்ல. அடுத்த மாசம் வர்றேன்." "அம்மா. பிளைட் டிக்கெட் கிடைக்கல."
பாட்டி நம்பினா. சந்தோஷமா இருந்தா. சாப்பிட்டா. சிரிச்சா. 88 வயசு வரைக்கும்.
ஒரு நாள் காலைல. பாட்டி தூக்கத்துலயே போய்டா. முகத்துல சிரிப்பு. கையில என் கடைசி லெட்டர்.
"அம்மா. நாளைக்கு கண்டிப்பா வர்றேன். ஏர்போர்ட்ல இருக்கேன்."
பாட்டி செத்துட்டா. ஆனா நிம்மதியா செத்தா. மகன் வருவான்னு நம்பிக்கையோட. ஏமாற்றம் இல்லாம.
ஊரே அழுதுச்சு. "போஸ்ட் மேன் தம்பி தெய்வம். 3 வருஷம் ஒரு உயிர வாழ வச்சான். பொய் சொல்லி."
நான் அழுதேன். "இல்ல. நான் பொய் சொல்லல. சத்தியத்த காப்பாத்தினேன். ராமு கொடுத்த சத்தியம். 'லெட்டர் வரும்'னு. வந்துச்சு. பாட்டி நம்பினா. சந்தோஷமா செத்தா. அது போதும்."
இன்னைக்கும் நான் போஸ்ட் மேன் தான். ஆனா ஒவ்வொரு வீட்லயும் லெட்டர் கொடுக்கும் போது ஒரு வார்த்தை சொல்வேன்.
"அம்மா. உங்க புள்ள நல்லா இருக்கான். லெட்டர் இல்லனாலும் மனசுல நீங்க தான் இருக்கீங்க."
ஏன்னா தபால்ல வர்றது காகிதம் இல்ல. உயிர். நம்பிக்கை. சத்தியம்.
நீங்க கடைசியா யாருக்கு லெட்டர் எழுதினீங்க. போன் இருக்கு. வாட்ஸ்அப் இருக்கு. ஆனா ஒரு காகிதம். கையெழுத்து. தபால். அதுல இருக்குற உணர்வு வேற.
எழுதுங்க. அம்மாவுக்கு. அப்பாவுக்கு. யாராவது ஒருத்தருக்கு. இன்னைக்கு.
ஏன்னா நாளைக்கு லேட் ஆய்டலாம்.
Shared Post ✍️ TamilVari
#கதை #படித்ததில்பிடித்தது
01/05/2026
Building a Future, One Brick at a Time. 🧱💪
This Labour Day, let's honor the strength of those who carry the heaviest loads to build our world. A small contribution from you can provide essential support for their "little needs" and offer a brighter future for their children. 👣✨
Every rupee counts! Make your impact today:
🏦 Bank: Canara Bank
🔢 A/c: 1350201000271
🆔 IFSC: CNRB0001350
✨ Benefit: All donations are tax-exempt under Section 80G.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
#920, 1st Floor, Giri Complex, Trichy Road, Ramanathapuram, Coimbatore/
Coimbatore
641045