JB FAST NET
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JB FAST NET, Business service, SIVANANDHAPURAM, Coimbatore.
Vacancy in reputed Insurance company
Post : Agency Manager & Sr Agency Manager
Urgent Openings are available at *COIMBATORE, TIRUPUR & ERODE locations*
*Salary 25000 & above + incentive*
Kindly forward reference/cv [email protected]
☎9171602577
*Please forward this message to all your contacts*
01/11/2012
01/11/2012
இனிய காலை வணக்கம்
டில்லியின் உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்குவது சாத்தியமில்லை ......
"மின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், தமிழகத்திற்கு உபரி மின்சாரத்தை வழங்குவது சாத்தியமில்லை,'' என, மத்திய மின் துறை இணை அமைச்சர் வேணுகோபால் தெரிவித்தார்.
டில்லி மாநில அரசு, உபரியாக ஒப்படைக்கவுள்ள மின்சாரத்தை, தமிழகத்துக்கு வழங்க வேண்டுமென, முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதில், தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை, ஓரளவுக்கு சமாளிக்க, 1,000 மெகாவாட் மின்சாரத்தை, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என, நான் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், இதுவரை, 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப் பட்டுள்ளது. அதிலும், 78 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. தேவையான அளவு மின் வினியோகம் இல்லாததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது, உணவு உற்பத்தியையும் பாதித்துள்ளது. எனவே, தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும். டில்லி மின் வாரியம், இந்தாண்டு நவம்பர் 1ம் தேதி முதல், அடுத்தாண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை, பல்வேறு மத்திய மின் நிலையங்களில், நாள் முழுவதும் உற்பத்தியாகும் மின்சாரத்தில், இருந்து, 230 மெகாவாட் மற்றும் நள்ளிரவு, 12:00 முதல், அதிகாலை, 6:00 மணி வரை உற்பத்தியாகும் 1,491 மெகாவாட் மின்சாரத்தையும், மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு எடுத்துள்ளது. இந்த மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.
இதற்குநேற்று முன் தினம் பதிலளித்த, மத்திய மின் துறை இணை அமைச்சர் கே.சி. வேணுகோபால், ""தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை, பிரதமர் காலம் தாழ்த்தாமல் பரிசீலிப்பார்,'' என, தெரிவித்திருந்தார்
இந்நிலையில், நேற்று இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறை பிரச்னை குறித்து, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. டில்லி மாநில அரசு, ஒப்படைக்க திட்டமிட்ட, 1,721 மெகாவாட் உபரி மின்சாரத்தை, தமிழகத்திற்கு வழங்குவது சாத்தியமில்லை. வட மின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தான் இதற்கு காரணம், என்றார். முதல்வர் ஜெ.,யின் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்நாள் கூறிய மத்திய மின் துறை இணை அமைச்சர் கே.சி. வேணுகோபால், மறுநாளே மறுப்பு தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், "பங்க்' டீலர்களுக்கான, கமிஷனை அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 30 காசும், டீசல் விலை, லிட்டருக்கு, 18 காசும் உயர்கிறது.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
SIVANANDHAPURAM
Coimbatore
641035