Perfect Events

Perfect Events

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Perfect Events, Bridal shop, Coimbatore.

Photos 01/07/2016

ராஜா சார் கார் கண்ணாடி கொஞ்சம் கீழ இறங்காதா? அவர் முகத்த பார்க்க மாட்டோமா?’னு நாங்கள்லாம் ஏங்குவோம்.
பாடகர்.நடிகர்., மனோ
******************************
இசைஞானியை தான் தெலுங்கு திரைப்படங்களுக்கு Track பாடிக்கொண்டிருந்தபோது முதன்முதலில் பார்த்ததாகத் தெரிவித்த திரு. மனோ, ‘ராஜா சார் கார் கண்ணாடி கொஞ்சம் கீழ இறங்காதா? அவர் முகத்த பார்க்க மாட்டோமா?’னு நாங்கள்லாம் ஏங்குவோம். சில சமயம் பார்க்க முடியும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக பழக்கம் ஏற்பட்டு ஒரு தெலுங்குப் பாடலுக்கு என்னை ட்ராக் பாட வைத்தார்.
“அவர் இசையமைத்த தெலுங்குப் பாடல்தான் என் முதல் பாடல். அப்போதான் என் ஒரிஜினல் பெயரான நாகூர் பாபு என்ற பெயரை மாற்றினார். ‘உன் பேர கொஞ்சம் சின்னதா மாத்தலாமா? ஒரு பெயர் சொல்லு’ என்றவரிடம், ‘சார்! நீங்களே சொல்லுங்க சார்’ என்றேன். அடுத்த நாள் என்னைக் கூப்பிட்டு ‘மனோஜ், மனோகர், இந்த மாதிரியான பெயர்கள் உனக்கு ஓ.கே.வா? என்று கேட்டார். நான் ‘சார் நீங்க சொன்னா சரிதான் சார்’னு சொல்லிட்டேன். உடனே ‘உன் பெயர் ‘மனோ’ என்று சொல்லிவிட்டார். அதன் பின்னர் பல பாடல்கள் அவருடைய இசையில் நான் பாடி, மனோ-சித்ரா என்ற சொற்கள் இணைந்து உலகெலாம் சென்றடைந்தது” என்று குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கும் மேலாக இசைஞானியிடம் தான், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடப் பாடல்களை பாடி வருவதாகத் தெரிவித்தார் மனோ. ‘ராஜா சார் இதுவரைக்கும் யார் பாடியும் ரெக்கார்டிங் முடிந்தவுடன் ‘நல்லா இருக்கு’னு சொன்னதில்ல. அதற்கு எனக்குத் தெரிந்த காரணம், ஒரு க்ரியேட்டருக்கு எப்பொழுதுமே தான் படைத்ததில் திருப்தி வந்து விடக்கூடாது. இதை இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாமே? இதை வேறுமாதிரி பண்ணி இருக்கலாமே?’ என்று தோன்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு க்ரியேட்டர் தன்னுடைய படைப்பில் satisfy ஆகிவிட்டால் அவருடைய Creativity கம்மி ஆயிடும். அதுதான் ராஜா சார் எப்பவும் ‘நல்லா இருக்கு’னு சொன்னதில்ல. அவர் ரெக்கார்டிங் முடிஞ்சவுடனே மௌனமாக இருந்தாலே, ரெக்கார்டிங் சமயத்தில் நாம திட்டு வாங்காமல் இருந்தாலே ‘அப்பாடா! நாம இந்தப் பாட்ட ஒழுங்கா பாடிட்டோம்’னு எங்களுக்குத் தோணும்’. If he is silent, நமக்கு ஒரு 70% மார்க் என்று அர்த்தம்’ என்றார்.
அப்போ எல்லாம் நான் ராஜா சார் கூடவே இருப்பேன். ‘சிங்காரவேலன்’ படத்திற்குப் பின்னர் எனக்கு 3-4 படங்கள் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தது. நானும் சந்தோஷமா ராஜா சார்கிட்ட போய் ‘அண்ணே! நீங்க வாய்ப்பு கொடுத்த நேரம் எனக்கு 3-4 படங்கள் நடிக்க வாய்ப்பு கெடச்சிருக்கு’என்று சந்தோஷமா சொன்னேன். ஆனால் ராஜா சாருக்கு ரொம்ப சந்தோஷம் இல்ல. ‘எதுக்காக நீ ரெண்டு கப்பல்ல கால வைக்கிற? இப்போ ஒழுங்கா பாடிகிட்டு இருக்க இல்ல? பின்ன ஏன் அனாவசியமா ட்ராக் மாத்துற? நடிக்கப் போறதுன்னா பாடுறத நிறுத்திடு’ என்று சொன்னார். ஒரு நேரத்தில ரெண்டு வேல செய்யக்கூடாது அப்டின்றத ரொம்ப நாசூக்கா சொன்னார். இப்போ 15 – 20 வருஷம் கழிச்சி யோசிச்சி பார்த்தா சரியான சமயத்தில ராஜா சார் என்ன Guide பண்ணி இருக்கார் என்று தோன்றுது. இப்போ நான் தெலுங்கு, கன்னடா, பெங்காலி என்று ஏதோ ஒரு மொழியில பாடிகிட்டு இருக்கேன். எனக்கு Programmes நிறைய வருது. என் Family–ல எல்லாரும் Happy-யா இருக்காங்க. சரியான நேரத்தில என்ன கரெக்டா Guide பண்ண ராஜா சாருக்குதான் நான் எப்பவும் நன்றிக் கடன் பட்டிருக்கேன்’ என்றார்.இன்னும் சொல்ல போனல் நான் தமிழில் பாடிய அத்தனை பாடல்களும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பதும் என்னை உயர்த நிலைக்கு கொண்டு சென்றதும் அந்த இசை மகான் போட்ட பிச்சை

Photos 14/06/2016

ஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார்.
அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந்த மலைப்பாம்பு உணவு உண்பதை நிறுத்தி விட்டதையும் அத்துடன் புதிய வழக்கமாக இரவினில் அந்த பெண் தூங்கும்போது அவள் மீது படுத்து கொள்வதையும் கவனித்தாள்.
அவருக்கு மிகுந்த கவலை வந்துவிட்டது. என்ன என்னவோ செய்து பார்த்தும் அந்த பாம்பு எதையும் உண்ணவில்லை. இறுதியாக அந்த மலைப்பாம்பை ஒரு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தார். பரிசோதித்து முடித்தவுடன் அந்த மருத்துவர் கவலையுடன் அந்த பெண்ணிடம் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்.
"உங்க பாம்பு உங்களை கொன்று விழுங்க தயாராகிக்கொண்டிருக்கிறது. உங்களுடைய நீள அகலத்தை இரவுகளில் நீங்கள் தூங்கும்போது அளக்கிறது. அது உங்களை அதனுடைய இரையாக முடிவு செய்த மறுகணமே உங்களை விழுங்க வசதியாக தன்னுடைய வயிற்றை காலி செய்துக்கொண்டிருக்கிறது. உடனடியாக அதனை கொல்லுங்கள்....!" என்றார்
#நீதி: உங்களை சுற்றியுள்ள அனைவரும், உங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து. உங்களை விழுங்கி ஏப்பம் விட தயாராக இருக்கும் அந்த மலைப்பாம்பை போன்ற நண்பர்களை இனம்கண்டு களைந்துவிடுங்கள்.
எதிரியை விட ஆபத்தானவர்கள் அவர்கள்....!!!

Want your business to be the top-listed Clothing Store in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Coimbatore
641014