Sadiq

Sadiq

Share

அஸ்ஸலாமு அலைக்கும்

14/04/2023

அல்லாஹ்வின் நல்லடியார்களே ஒரு பணிவான வேண்டுகோள்!
கீழே தஹஜ்ஜுத் தொழுகை குறித்து பதிவு செய்துள்ளேன்
இப்பதிவை கண்டு யாரேனும் ஒருவர் பகிர்ந்து அதனால் யாரேனும் தொழுதாலும் மிகப்பெரிய நன்மைகள் உண்டாகும் அல்லாஹ் ஜல்ல ஜலாலுஹு உங்கள் துவாக்கள் அணைத்தையும் ஆமீன் ஆக்கி தரட்டும்.

உங்களது துவாக்களில் இந்த எளிய அடியானையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்ததும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிய துஆ

اَللّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُوْرُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ وَالنَّبِيُّوْنَ حَقٌّ وَمُحَمَّدٌ حَقٌّ اَللّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَبِكَ آمَنْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدّمُ وَأَنْتَ الْمُؤَخّرُ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ
அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து
அன்(த்)த நூருஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி வமன் ஃபீஹின்ன,
வல(க்)கல் ஹம்து அன்(த்)த கையிமுஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி,
வல(க்)கல் ஹம்து அன்தல் ஹக்கு, வ வஃது(க்)க ஹக்குன், வ கவ்லு(க்)க ஹக்குன், வ லி(க்)காவு(க்)க ஹக்குன், வல் ஜன்ன(த்)து ஹக்குன், வன்னாரு ஹக்குன், வஸ்ஸாஅ(த்)து ஹக்குன், வன்னபிய்யூன ஹக்குன், வ முஹம்மதுன் ஹக்குன், அல்லாஹும்ம ல(க்)க அஸ்லம்(த்)து, வ அலை(க்)க தவக்கல்(த்)து, வபி(க்)க ஆமன்(த்)து, வஇலை(க்)க அனப்(த்)து, வபி(க்)க காஸம்(த்)து, வஇலை(க்)க ஹாகம்(த்)து ஃபக்ஃபிர் லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து அன்(த்)தல் முகத்திமு வஅன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த

இரட்சகனே!
! உனக்கே புகழனைத்தும். வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடைப்பட்டவைகளுக்கும் நீயே ஒளியாவாய்.

உனக்கே புகழனைத்தும். வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப் பட்டவைகளையும் நிர்வகிப்பவன் நீயே.

உனக்கே புகழனைத்தும் நீயே மெய்யானவன்.
உனது வாக்குறுதி மெய்யானது.
உன் சொல் மெய்யானது.
உன்னை (நாங்கள்) சந்திப்பது மெய்யானது. சொர்க்கம் மெய்யானது.
நரகமும் மெய்யானது. யுக முடிவு நாளும் மெய்யானது.
நபிமார்கள் மெய்யானவர்கள். முஹம்மதும் மெய்யானவர்.

இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன்.
உன் மீது நம்பிக்கை வைத்தேன்.
உன்னையே நம்பினேன்.
உன்னிடமே மீள்கிறேன்.
உன்னைக் கொண்டே வழக்குரைக்கிறேன். உன்னிடமே தீர்ப்புக் கோருகிறேன்.
எனவே நான் முன் செய்தவைகளையும்,
பின்னால் செய்யவிருப்பதையும்,
நான் இரகசிய மாகச் செய்ததையும்,
நான் வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக.
நீயே முற்படுத்துபவன்.
நீயே பிற்படுத்துபவன்.
உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
ஆதாரம்: புகாரி

https://chat.whatsapp.com/FMmc51iAuYu0tq6FozLM7N

Want your business to be the top-listed Clothing Store in Tirupur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Tirupur