Adv Rajamani
Do or Die
27/04/2024
15/03/2024
பயிற்சியின் போது வியர்வை சிந்துவதற்கு தயங்கியவன், போர்க்களத்தில் இரத்தம் சிந்துவான் என்பது உலக மகா முனியின் வாக்கு.
தொடர்ச்சியான பயிற்சியும்
நாள்தோறும் ஏற்படும் சட்ட மாற்றங்களை நுணுக்கமாக அறிந்து வைத்திருப்பதும் வழக்கறிஞராக வாழ்வதற்கான நிபந்தனை ஆகும்.
ஒரு வழக்கினை தயாரிக்கும் போது எழுகின்ற ஒரே ஒரு வினாவை ஐயமுற தீர்க்க வேண்டுமெனில்...
தலைக்கு தலையணையாக வைத்து தூங்கும் அளவிற்கு பெரிதான நாலைந்து புத்தகங்களையாவது புரட்ட வேண்டியது இருக்கும்,
ஒரு பத்து இருபது உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தேட வேண்டியது இருக்கும்,
விசயம் தெரிஞ்சவங்க தெரியாதவனுங்க அப்படினு ஒரு நாலு பேர்கிட்ட கேட்க வேண்டியது இருக்கும்
சிலபேர் ஒன்னுமே தெரியாட்டாலும் மொத்த சட்ட புத்தகங்களையும் கரைச்சி குடிச்ச மாதிரி பேசுவானுக, அதையெல்லாம் பொறுமையாக கேட்க வேண்டியது இருக்கும்
இதெல்லாம் செஞ்ச பின்னாடியும் பல நேரங்களில் நாம தேடின பதில் கிடைக்காது.
அதையும் தாண்டி வர வேண்டியது இருக்கும்.
ஒரு வழக்கை தயாரிப்பதில் இது போன்று பல கேள்விகளுக்கு தீர்க்கமாக பதில்களை கண்டடைந்த பின்னரே அந்த வழக்கினை சிறப்பான முறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்.
பல ஆண்டுகளாக வழக்கறிஞராக, எவ்வளவு மூத்த வழக்கறிஞராக இருந்தாலும், நாம் தயாரிக்கும் வழக்கு நன்முறையில் தாக்கல் செய்யப்பட வேண்டுமாயின் இதுதான் நடைமுறை (Process).
இதற்காக அந்த வழக்கறிஞர் செலவிடும் நேரம் என்பது மிக அதிகம்.
கிட்டதட்ட ஒரு வார கால தேடலின் இறுதியில், ஏற்கனவே தயாரித்த மனுவில் ஒரே ஒரு வரி அல்லது ஒரே ஒரு வார்த்தை தான் அந்த வழக்கிற்காக பிரத்யேகமாக சேர்க்க வேண்டியதாக இருக்கும்.
ஏனெனில் ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மை கொண்டது. பொத்தாம் பொதுவாக வழக்கை தாக்கல் செய்வது எளிது, ஆனால் அதில் வெற்றி பெற முடியாது.
தனக்காக இவ்வளவு போராடும் வழக்கறிஞருக்கு வழக்காடிகள் செய்யும் மரியாதை என்பது அவர்கள் அளிக்கின்ற கட்டணம் தான்.
நீங்கள் தர வேண்டிய கட்டணத்தில் கருமித்தனம் காட்டினால் உங்கள் வழக்கறிஞர் உங்கள் வழக்கிற்காக செலவிடும் நேரமும் ஆர்வமும் குறைந்துவிடும்.
எந்த வழக்கில் தனக்கு அதிக மரியாதை கிடைக்கிறதோ அந்த வழக்கில் தன்னுடைய நேரத்தை முதலீடு செய்யவே அறிவுடைய யாருமே விரும்புவார் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். இதுவே மனித இயல்பு.
உங்களால் வழக்கறிஞர் கட்டணம் கொடுக்க இயலாத சூழல் இருப்பின், அதனை உங்கள் வழக்கறிஞரிடம் முன்னரே வெளிப்படையாக கூறி விடுங்கள். அது உங்களுக்கு நன்மையாக இருக்கும்.
வசதி இல்லாத பலருக்கு இலவசமாக வழக்கு நடத்தி தரும் நல்ல உள்ளம் படைத்த பல வழக்கறிஞர்கள் இந்த சமூகத்தில் இன்னமும் இருக்கதான் செய்கிறார்கள்.
மாறாக, தலையை ஆட்டிவிட்டு வேலை முடிந்த பின்னர் வழக்கறிஞரை ஏமாற்றிவிடலாம் என நினைத்தால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Tuticorin
Opening Hours
| Monday | 9am - 10pm |
| Tuesday | 9am - 10pm |
| Wednesday | 9am - 10pm |
| Thursday | 9am - 10pm |
| Friday | 9am - 10pm |
| Saturday | 9am - 10pm |