Batticaloa.com

Batticaloa.com

Share

Unique Media with Ethics
ஒழுக்கத்துடனான தனித்துவ ஊடகம்

21/02/2026

வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் பணியாற்றிய இளம் வைத்தியர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின், சிறுவர் விடுதியில் பணியாற்றி வந்த இளம் வைத்தியர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அம்பாறை காரைதீவை பிறப்பிடமாக கொண்ட, மட்டக்களப்பு அரசடியில் வசித்து வந்த, செல்வராஜா பிரணவசோதி (வயது 31) என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை, தனது கடமை முடிந்து விட்டு வீடு திரும்பிய அவர், உறங்கிக் கொண்டு இருந்த போது திடீரென வாந்தி எடுத்த நிலையில், மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவர் போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை தகவல்கல் தெரிவிக்கின்றன.

மருத்துவ படிப்பை நிறைவு செய்த வைத்தியர் செல்வராஜா பிரணவசோதி, நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று அங்கு பணியாற்றி , அதன்பின் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு இடம்மாற்றம் பெற்று, இங்கு பணியாற்றிய நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீதிமன்ற பணிப்புக்கமைவாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

14/02/2026

நாதஸ்வரத்தினால் பாடல் வாசித்து அசத்திய நம்ம மட்டக்களப்பு இளைஞர்கள்!

Batticaloa.com
#நம்மமட்டக்களப்பு

25/01/2026

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2534 மில்லியன் பெறுமதியில் வீதிகள் அமைக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் போக்கு வரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா பங்குபற்றுதலுடன் மாவட்டத்திற்கு 2534 மில்லியன் பெறுமதியிலான வீதி அபிவிருத்தி திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு இன்று (25) இடம் பெற்றன.

போக்கு வரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் நடைபெறும் இரண்டாவது ஒருங்கிணைந்த நிகழ்வுகள் இடம் பெற்றது.

இத் திட்டத்தின் மூலம் மாவட்டத்திற்கு 48 வீதிகள் 52.23 கிலோ மீற்றர் நிலம் கொண்ட வீதிகள் அமைக்கப்படவுள்ளன.

ஆரம்பக் கட்டமாக வந்தாறுமூலை களுவன்கேணி 2.10 கிலோ மீற்றர் நிலமான வீதியும், உப்போடை ஈஸ்ட்லகூன்வீதி 2.38 கிலோ மீற்றர் நிலமான வீதியும், குறிஞ்சாமுனை பாவற்கொடிச்சேனை வரையிலான 6 கிலோ மீற்றர் நிலமான வீதியும், களுமுந்தன் வெளியில் 2.64 கிலோ மீற்றர் நிலமான வீதியும் புணரமைக்கப்படவுள்ளன.

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் அடையாளமாக காணப்படும் கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் காணப்படும் இவ் வீதியினை புணர்நிர்மானம் மேற்கொண்டு மிக விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என்பதுடன் இம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளை அமைத்து தொழில் வாய்ப்புக்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளட்டவுள்ளதாக கருத்து தெரிவித்தார்.

இப் பிரதேசத்தில் வாழும் 150 மேற்பட்ட குடும்பங்களின் வேண்டு கோளுக்கு அமைவாக
எதிர்வரும் மார்ச் மாதம் 15 திகதிக்கு முன்னர் இவ் வீதியை நிறைவு செய்வதற்கு பணிப்புரை செய்வதாக போக்கு வரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கூறியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Want your business to be the top-listed Media Company in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Batticaloa
SRILANKA