Eastern News7
தொடர்ந்தும் இணைந்திருங்கள் எமது https://www.threads.net/@easternnews7
03/06/2026
அங்குருவடோட்டாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூன்று பேர் காணாமல் போனதாகவும், 55 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் - காவல்துறை ஊடகம்
03/06/2026
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தந்தங்களுடன் புதைக்கப்பட்ட யானையின் தலை தோண்டியெடுப்பு.!!
2024 டிசம்பரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருந்த 'தீக தந்து 1' யானையின் தந்தங்களுடன் கூடிய தலைப்பகுதி கல்கிரியாகம வனவிலங்கு பிரிவின் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று(03) தோண்டியெடுக்கப்பட்டது.
கல்கிரியாகம, ஆடியாகல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி'தீக தந்து 1' யானை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண பரிசோதனையின் பின்னர் யானையின் தலைப்பகுதி உடலிலிருந்து வேறாக்கப்பட்டு, கல்கிரியாகம வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருந்ததுடன் இன்று தோண்டியெடுக்கப்பட்டது.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.!!
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 192 ஆவது வருடாந்த திருவிழா இன்று புதன்கிழமை (3) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
கொடியேற்றத்திற்கு முன்னதாக இன்றையதினம் தமிழ், சிங்கள மொழிகளில் காலை 6 மணிக்கு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
கொடியேற்றத்தை தொடர்ந்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தினந்தோறும் நவநாள் வழிபாடுகள் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகின்றன.
இதையடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நற்கருணை ஆராதனை இடம்பெறவுள்ளது.
திருவிழா தினமான 13 ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.
திருவிழா பாடல் திருப்பலிகள் அன்றைய தினம் காலை 8 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் தமிழ் மொழியிலும் காலை 10 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகையின் தலைமையில் சிங்கள மொழியிலும் நண்பகல் 12 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் ஜே.டி.அன்தனி ஆண்டகையின் தலைமையில் ஆங்கில மொழியிலும் ஒப்புக்கொடுக்கப்படும்.
புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் அன்றையதினம் 13 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணியளவில் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்து நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் நிறைவுபெறும்.
03/06/2026
🚨
ஈஸ்ட்டர் தின தாக்குதல்
கோட்டாபயவிற்கு வெளிநாடு செல்ல தடை.!!
ஈஸ்டர் ஞாயிறன்று நடைபெற்ற தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Colombo