Dream Today

Dream Today

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dream Today, Business Center, Colombo, Western, Colombo.

03/07/2021

"அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்"

ஸ்டீபன் கவி எழுதிய அற்புதமான நூல்... அவசியம் படிக்க தவறாதீர்கள்.... புத்தகத்தில் கூறப்பட்ட 7 பழக்கங்கள் மொத்தத்தில் இவை தான்.....

(1) இதில் முதல் பழக்கமாக இவர் முன்வைப்பது, "முன்யோசனையுடன் செயலாற்றுதல்" என்பதை!
அதாவது நடக்கும் பிரச்சனைகளுக்கு யார் மீதும் பழி போடாமல் நம்மால் என்ன செய்ய முடியும் என யோசித்தல்......

(2) பழக்கம் இரண்டு எனக் குறிப்பிடுவது, முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல் என்பதை!அதாவது இலக்கை வைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், இலக்கை நோக்கி ஓடவும் செய்தல். இதில் "தனிமனித தலைமைத்துவம்" குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன.

(3) மூன்றாவது பழக்கமாக, "முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல்" என்பது.
அதாவது முக்கியமான வேலைகளுக்கு மட்டும் முதலில் முக்கியத்துவம் கொடுத்தல். இதில் நிர்வாகம் குறித்த கருத்துகள் நிறைய உள்ளன.

(4) "எனக்கும் வெற்றி, உனக்கும் வெற்றி" என்ற சிந்தனை நான்காவது பழக்கமாகக் காட்டப்படுகிறது.
அதாவது அடுத்தவர் பற்றி பொறாமையை விட்டு விட்டு சொந்த வெற்றியை மாத்திரம் இலக்காக்கிக் கொள்ளல். இதில் மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைமைத்துவம் குறித்த கருத்துகள் உள்ளன.

(5) "முதலில் புரிந்துகொள்ளுதல், பின்னர் புரியவைத்தல்" என்ற பழக்கத்தை ஐந்தாவதாகக் காட்டுகிறார்.
அதாவது அடுத்தவர்களின் தேவைகளை புரிந்து செயற்படல் ஆகும்.
இதில் பிறர் நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்வது குறித்த கொள்கைகள் கூறப்பட்டுள்ளன.

(6) ஆறாவது பழக்கம் எனக் காட்டுவது, "கூட்டு இயக்கம்" என்பதை! படைப்பாற்றலுடன்கூடிய கூட்டுச் செயல்பாடுகள் குறித்த கொள்கைகள் இதில் உள்ளன.
அதாவது அவ்வப்போது நமக்கு தேவையானோருடன் கை கோர்க்க வெட்கப்படாமல் அவர்களோடு கைகோர்த்துக்கொள்ளல் ஆகும்.

(7) ஏழாம் பழக்கமாக, "எப்போதும் நம்மை கூர்தீட்டிக்கொள்ளல்.
அதாவது அறிவையும் உடலையும் எப்போதும் கூர்மை படுத்திக்கொள்ளல் என எல்லாத் தளங்களிலும் சுயபுதுப்பித்தலை மேற்கொள்வது குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன.
தன்னிலை முன்னேற்றம்தான். தான் மாறினால் மட்டுமே உலகம் மாறும் என்னும் கருத்து அதிகம் அறிவுறுத்தபட்டுள்ளது.
இந்த புத்தகத்தை படித்து முடித்துவிட்டு ஒதுக்கிவிடகூடிய புத்தகமல்ல. ஆனால் தினம் தினம் படிக்க வேண்டிய புத்தகம். தினம் படித்து பழக்கபட வேண்டிய புத்தம். இந்த புத்தகத்திற்கு முன்னால் மாணவனாக இருக்கவேண்டும். அவைகளை பழகும் போது தன்னம்பிக்கை தானாக வளரும். நமக்கே ஒரு வித்தியாசம் வரும். இந்த புத்தகத்தை குறித்து புத்தக சுருக்கம் எழுதுவது சாதாரண வித்தியாசம் இல்லை. இந்த புத்தகம் குறித்து எழுத வார்த்தைகள் குறைவு. ஆனால் எண்ணங்கள் மிக அதிகம்.
ஆங்கில மூலநூலின் சாரம் கெடாமல் மொழிமாற்றம் செய்திருப்பது மிக மிக சிறப்பு.

30/06/2021

சாதிப்பதற்கு உங்களுக்கென்ன தடை இருந்துவிடப் போகின்றது?

29/06/2021

முயற்சிப்பது முடியுமான வரை அல்ல
மூச்சு உள்ள வரை

21/06/2021

எது வெற்றி..?

வெற்றி பெறுவது என்பது வேறு. பிறரைத் தோற்கடிப்பது என்பது வேறு. இதற்கிடையில் உள்ள வித்தியாசத்தைப் பலர் உணர்வதில்லை. பிறரைத் தோற்கடிப்பது சுலபம். ஆனால் நாம் வெற்றி பெறுவது என்பது கடினமான காரியம். இந்த இரண்டையும் ஒன்றாகக் குழப்பிக் கொண்டவர்கள் பலர்.

இப்படிச் சொல்லுகிறேன். நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு. இரண்டும் ஒன்றாகிவிட முடியுமா? எத்தனை பேரை வேண்டுமானாலும் சுலபமாக நீங்கள் முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை, இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை! ஓர் உதாரணம் சொல்லுகிறேன்.

பள்ளிக் கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண், தன் முப்பத்து ஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள்.

அப்பா ஒரு குட்டிக் குரங்கு தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு காட்டாத்து வெள்ளம் திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது பயங்கர வெள்ளம் கீழே அது எப்படித் தப்பிக்கும், சொல்லு? என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.

அரை மணி நேரம் மாறி மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும்... தெரியலை, நீயே சொல்லு'' என்றார் மகளிடம்.
ஆங் இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?'' என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள் அந்த சின்னப் பெண்.

அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம்தான் எங்கும் நடக்கிறது.

பிறரை வாய் மூடச் செய்வது... செயலிழக்கச் செய்வது... தோற்றுப் போகச் செய்வது... ஆளவிடாமல் தடுப்பது... முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது... இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறார்கள்.

இந்தத் தவறுதலான எண்ணத்தில் இருந்து தயவு செய்து வெளியே வாருங்கள். பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல...

நமது வெற்றியே நமது குறிக்கோள்...

என்கிற தெளிவு இருக்க வேண்டும். நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்கமாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.

நமது வெற்றிதான் முக்கியம். பிறரைத் தோற்கடிப்பதில் நமக்கு என்ன நன்மை விளையப் போகிறது?

அதனால்தான் பகை வளர்கிறது.
தாங்கள் வெற்றி பெறுவதற்காகப் பயன்படுத்தினால் தேசம் வளர்ச்சியுறும். பிறரைத் தோற்கடிப்பது வெற்றி அல்ல! நாம் வெற்றி பெறுவதே வெற்றி என்கிற துல்லியமான வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

Want your business to be the top-listed Business in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Colombo, Western
Colombo
01