Lindula News

Lindula News

Share

செய்திகள்

14/06/2026

இலங்கை, கொழும்பு காலிமுகத்திடலில் 5,000 நடன கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனை நிகழ்வாக பதிவு...!

இன்று (14.06.2026) கொழும்பின் Galle Face Green வளாகத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே மேடையில் ஒன்றுகூடி நடனமாடி புதிய உலக சாதனை முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
இந்நிகழ்வு இலங்கையின் கலை, கலாசாரம் மற்றும் தமிழ் பாரம்பரியத்தின் பெருமையை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை உயர்த்திக் காட்டியுள்ளது. ஆயிரக்கணக்கான கலைஞர்கள் ஒரே நேரத்தில் பரதநாட்டியத்தை அரங்கேற்றிய இந்த அற்புத தருணம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்ததுடன், சர்வதேச அளவிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடனம் என்பது வெறும் கலை வடிவம் மட்டுமல்ல; அது ஒரு பண்பாட்டு அடையாளம் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் நிரூபித்துள்ளது. சிறுவர்கள் முதல் மூத்த கலைஞர்கள் வரை பல்வேறு வயதினரும் ஒன்றிணைந்து நிகழ்த்திய இந்த மாபெரும் அரங்கேற்றம், ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் கலை மீதான பற்றுறுதியின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இலங்கையின் கலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் இந்த சாதனை முயற்சியில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும், நடன ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! கலை வளர்க, கலாசாரம் தழைக்கட்டும்!

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Colombo