KuralMax.lk

KuralMax.lk

Share

Upcountry No-1 Digital News Channel

12/10/2022

இவரை தெரியுமா..! பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

மூன்று பேரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
கம்பஹா - மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பிரதான சந்தேநபரான குறித்த நபர் தேடப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே சந்தேகநபரை கைது செய்வதற்காக பொதுமக்களின் ஆதரவை பொலிஸார் கோருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.சந்தேகநபர் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்
ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே, மஹிந்தராம வீதியை சேர்ந்த ஜயகொடகே சஞ்சீவ டோன சஞ்சீவ லக்மால் (39 வயது) என்ற நபரே சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்துள்ளார்.

அத்துடன் சந்தேக நபரின் புகைப்படமும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா - 0718591608, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா - 0718591610, நிலைய பொறுப்பதிகாரி மினுவாங்கொடை - 0718591612 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

12/10/2022

மகிந்தவின் அதிரடி அறிவிப்பு - சூடு பிடிக்கும் தென்னிங்கை அரசியல்
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேசியத் தேர்தலை எதிர்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

மார்ச் மாதத்திற்குப் பின்னர் பொதுத் தேர்தல் அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தனது செயற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

மகிந்தவின் நம்பிக்கைஇதனால், கிராம மட்டத்திலிருந்து கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படும் மாவட்ட, தொகுதி மட்டக் கூட்டங்களிலும் தானும் பங்கேற்கவுள்ளதாக மகிந்த தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்து எழுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத் தொடருடன் பிராந்திய மற்றும் கிராம மட்டத்தில் சிறிய கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு மகிந்த தனது செயற்பாட்டாளர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த வேலைத்திட்டத்தின் இறுதியில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் எனவும், பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாபெரும் வெற்றியாருடைய நம்பிக்கையையும் உடைய இடமளிக்க மாட்டேன். எந்த தேர்தல் நடந்தாலும் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

சற்று அமைதியாக காத்திருந்த தமது கட்சியினரை எழுப்பி தேர்தலுக்கு அனுப்பும் நடவடிக்கையையே செய்ய வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.கடந்த அரசாங்கத்தில் பாரிய ஊழல் மோசடியில் ஈடுபட்ட ராஜபக்சர்களை மக்கள் தமது போராட்டம் மூலம் வெளியேற்றியிருந்தனர். இந்நிலையில் தமது வெற்றி என்ற கோசத்துடன் மகிந்த விடுத்துள்ள அறிப்பானது தென்னிலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12/10/2022

சமூக வலைதளங்கள் ஊடாக பல மில்லியன் ரூபாய் மோசடி
குறித்த சந்தேக நபர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு பரிசில்களை வழங்குவதாக கூறி சமூக ஊடகங்கள் ஊடாக 11,627,175 ரூபாவை தனது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளார்.

இதன்படி, பணமோசடி சட்டம், குற்றவியல் துஷ்பிரயோகம், குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் பணமோசடி சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.அங்கொட பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஹிம்புட்டானா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களுக்கு எச்சரிக்கைகைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு எச்சரிக்கைசமூக வலைதளங்கள் மூலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

12/10/2022

இலங்கைக்கு உடனடி ஆபத்து! ஐ.நா எச்சரிக்கை

உலகின் மிக வறிய மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் மிகவும் அவசியத் தேவையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் உடனடியாக ஆபத்துள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை, பாகிஸ்தான், டுனிசியா, சாட் மற்றும் சாம்பியா ஆகியவை உள்ளதாக ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டசின் கணக்கான வறிய, கடனாளி நாடுகள் கடும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்கின்றன.

பல நாடுகள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தவோ அல்லது புதிய நிதியுதவியை அணுகவோ இயலாத நிலையில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Want your business to be the top-listed Media Company in Hatton?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Hatton