Siddha Maha Sangam
சித்தமருத்துவ தகவல்கள்
வயிற்றில் உள்ள புழுக்கள், பூச்சிகள் நீங்க.....
1. பாகற்காய் கொடி இலையை சாறு பிழிந்து உட்கொள்ள வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் பூச்சிகள் அழியும்.
2. வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் ஒரு கரண்டி தேன் கலந்து காலை,மாலை 2 வேளை சாப்பிட வயிற்று பூச்சி தொந்தரவு தீரும்.
3. அன்னாசிபழத்தை தினமும் சாப்பிடலாம்.
4. எருக்கம் இலைச் சாறு 3 துளியை எடுத்து 10 துளி தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.(குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது)
5. பப்பளிப்பாலை விளக்கெண்ணையில் கலந்து குடிக்க நீங்கும்.
6. குடல் புழுக்கள் நீங்க, மாதுளம் பழத்தை சாப்பிடலாம்.
7. வெங்காய பூவை அடிக்கடி உணவுடன் பயன்படுத்தி வரலாம்.
8. நுண்புழுக்கள் அழிய ;-- மணலிக்கீரையை உண்டு வரலாம்.
9. குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர ;-- வேலிப்பருத்தி வேர் 4 சிட்டிகையை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
10 . குப்பைமேனி வேர் பொடியை கஷாயம் செய்து குடிக்க நாக்கு பூச்சி நீங்கும் .
11. குடல் புண் குணமாக, அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும்.
கள்ளு (கள்)
1. கள் என்றால் என்ன ?
#பனை, #தென்னை மரங்களில் பாளையை பக்குவப்படுத்தி சீவினால் தேன் போன்ற இனிப்பான திரவம் கிடைக்கும். அது சற்று நொதித்து புளிப்பு சுவையாக மாறினால், அதுதான் கள்
2. பதநீர் என்றால் என்ன ?
மண் கலையத்தில் சுண்ணாம்பு தடவி பனை, தென்னை மரங்களின் பாளைகளில் இருந்து கிடைக்கும் திரவத்தை சேகரித்தால், அதுதான் பதநீர்.
3. கள் மது வகையா ?
கள் மது வகை கிடையாது. உணவு வகைகளில் ஒன்று. இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 47, கள்ளை உணவாகவும், மருந்தாகவும் வகைப்படுத்தி உள்ளது.
4. கள் போதை தருமா ?
புளித்த மாவில், தயிரில் கிட்டத்தட்ட 2% ஆல்காஹல் உள்ளது. கள்ளில் 2%-4% ஆல்காஹல் உள்ளது, இதனால் போதை வராது, கள் குடித்த பிறகு, சூடாக காரமான உணவுகளை உண்டால் சிறிது போதை வரும்
5. கள்ளால் என்ன பயன் ?
பல ஊட்டச்சத்துகள் உள்ளன, சில நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது, தடை நீக்கப்பட்டால் #பனை மரங்கள் அழிவதை தடுக்கலாம், பனை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்படும்
6. கள் மதுவுக்கு மாற்று பொருளா ?
கள்ளுக்கும், மதுவுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. கள் மதுவுக்கு மாற்று பொருள் கிடையாது. உணவில் உள்ள சத்துகள் கள்ளில் உள்ளன, விஸ்கி பிராந்தியில் சத்துகள் இல்லை, இரண்டும் வெவ்வேறு வியாபாரங்கள்.
7. கள்ளுக்கு தடை ஏன் ?
அரசாங்கத்தால் கள்ளில் நடக்கும் கலப்படத்தை தடுக்க முடியவில்லை என்று காரணம் கூறி கொள்கை முடிவாக கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
8. உலகில் வேறு எங்கெல்லாம் கள் தடை செய்யப்பட்டுள்ளது ?
வேறு எங்கும் இல்லை.
9. கள்ளை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குடிக்கலாமா ?
பிறந்த குழந்தைகள் கூட குடிக்கலாம்.
10. கள்ளை மருத்துவத்துறை எதிர்க்கிறதா ?
எதிர்ப்பதில்லை.
11. கள் பற்றி அரசுகளின் கள் ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன ?
கள் தடை கூடாது, மக்களுக்கு தரமான கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், கள் விற்பனையை கூட்டுறவு (அ) தன்னார்வலர் அமைப்புகள் (அ) அல்லது மரமேறுவோர் சங்கம் மூலம் நடத்த வேண்டும் என்பதே பிற மாநிலங்களில் நீதிபதிகள் தலைமையிலான ஆய்வு குழுக்களின் பரிந்துரை ஆகும்
நன்றி:
தமிழ்நாடு கள் கூட்டமைப்பு
03/08/2023
இனிப்பு உணவு வகைகள் குறித்து எச்சரிக்கை. E951 அஸ்பார்டேம்
இலங்கையில் இதுவரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள அஸ்பார்டேம்(Aspartame) என்ற இனிப்பானது புற்றுநோயை உண்டாக்கக் கூடிய இரசாயனம் என உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் ரொஷான் குமார இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அந்த இனிப்புப் பொருளை உணவில் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“சில சட்ட நடைமுறைகள் மூலம் இலங்கையின் நுகர்வில் இருந்து நீக்கப்படும் வரை இதுபோன்ற புற்றுநோயை உண்டாக்கும் உணவுகளை பொதுமக்கள் உட்கொள்வதைத் தடுப்பது அவசியம்.
அதைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம். E951 எனும் பதார்த்தம் கொண்ட இனிப்பு வகை உணவுகள் இப்போது சந்தையில் பரவலாகக்கிடைக்கின்றன.
அவற்றில், *பச்சை நிறத்தில் இருக்கும் பெரும்பாலான இனிப்பு பானங்கள் (டிராஃபிக் லைட் அமைப்பின் படி) அல்லது குறைந்த சர்க்கரை இனிப்புப் பொருட்களில் பெரும்பாலும் இந்த பதார்த்தம்* காணப்படுகிறது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான இனிப்பு சாக்லேட் லாலிபாப்கள் மற்றும் வெளிநாட்டு இனிப்பு உணவுகள் மற்றும் பானங்களில் இந்த இனிப்பு அதிகமாக காணப்படுகிறது.
எனவே, பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்துவது மற்றும் புற்றுநோய் உணவாக உறுதிசெய்யப்பட்ட E951 அஸ்பார்டேம் கொண்ட உணவைத் தவிர்ப்பது அவசியம்.
உணவு பொருட்களில் உள்ள ஸ்டிக்கர்களின் உள்ளடக்கங்களைச் சரிபார்ப்பதன் மூலம் அஸ்பார்டேம் பயன்படுத்தப்படுகிறதா என்பதை எந்தவொரு நபரும் அடையாளம் காண முடியும்.
சர்க்கரையைப் பயன்படுத்தக் கூடாதவர்கள், இந்த E951 அஸ்பார்டேம் இனிப்பானைத் தங்கள் இனிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இனிப்பானாகப் பயன்படுத்தை தவிர்க்க வேண்டும்.
#கடன்_தீர_எளிய_பரிகாரம் :
சனிக்கிழமை அன்று ஒரு அரச மர இலையை பறித்து வந்து அதை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு பூஜை அறையில் சுவாமியை பார்த்தவாறு இலையின் காம்பு இருக்குமாறு வைத்து, அதன் மேல் ஒரு அகல் விளக்கை வைக்க வேண்டும்.
அகல் விளக்கின் தீபமானது சுவாமியை பார்த்தவாறு ஏற்ற வேண்டும்.
அந்த அகல் விளக்கில் பச்சை நிற திரியை போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு நாம் தொடர்ந்து 48 வாரங்கள் சனிக்கிழமை தோறும் செய்ய வேண்டும். இயலாதவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் செய்யலாம்.
இந்த பரிகாரத்தை தொடங்கும் நாள் கண்டிப்பாக சனிக்கிழமையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நாம் பரிகாரம் செய்வதால் நம்முடைய தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.
எவ்வளவு பெரிய தொகை கடனாக இருந்தாலும், அந்தக் கடன் படிப்படியாக தீரும். நாம் நினைத்தது அனைத்தும் நடக்கும்.
சங்கல்பங்கள் நிறைவேறும்.
Om namashivaya
#கடன்
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the practice
Website
Address
Trincomalee-Nilaveli Road
Trincomalee