Hayan Photography
Maintain Product quality,Timeliness & Customer satisfaction is always considered in output
25/06/2025
"ஆயிரம் ஆயிரம் செம்மணிக்குள் எங்களை கொன்று புதைத்தாலும்...
பாட்டியும் போராடினார், அம்மாவும் போராடினார்...
நானும் போராடுவேன்...
விடிவு வரை"
- செம்மணி மனிதப் புதைகுழிக்குள் இருந்து ஒரு குழந்தை -
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக திருகோணமலையில் அமைதிப் போராட்டம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் அவர்களின் திருகோணமலை வருகையை முன்னிட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் மோசமான மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், அமைதியான கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று இன்றைய தினம் (25) திருகோணமலையில் நடைபெற்றது.
இந்த நடவடிக்கையை, பாதிக்கப்பட்ட மக்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் வடக்கு-கிழக்கு சமூக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
திருக்கோணமலை யுபிலி மண்டபம் முன்பாக இன்று காலை 9.30 மணியளவில், பாதிக்கப்பட்ட சமூகத்தினரும், குடிமைப் பூர்வ அமைப்புகளும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் ஒன்றிணைந்து இந்த அமைதிப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
புகைப்படத் தொகுப்பு | Karthi Hayan | ஊடகவியலாளர்
18/04/2025
அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் நடாத்திய "நூல்களை பேசுவோம்'' நிகழ்வு - 18.04.2025
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Trincomalee